/* */

ஆவடி அருகே கஞ்சா விற்பனை செய்த மூன்று பேர் கைது

ஆவடி அருகே , கஞ்சா விற்பனை செய்த மூன்று நபர்கள் கைது அவர்களிடம் இருந்து 4 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

ஆவடி அருகே  கஞ்சா விற்பனை செய்த மூன்று  பேர் கைது
X
கைதானவர்கள்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த அயப்பாக்கம் வாட்டர் டேங்க் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக திருமுல்லைவாயில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் காந்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அயப்பாக்கம் வாட்டர் டேங்க் சந்திப்பில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு சந்தேகம் பேரில் கஞ்சா விற்பனை செய்ய வந்த வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த நித்தியாதரன் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளிகள் ரபியுல் இஸ்லாம் மற்றும் முகமது அதிகுல் உசேன் மூவரை அதே இடத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 4 கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் அவர்கள் பயன்படுத்திய பல்சர் இருசக்கர வாகனம் மற்றும் 3 செல்போன்களை பறிமுதல் செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் மீது திருமுல்லைவாயில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

Updated On: 6 April 2022 1:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  2. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  3. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  4. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  5. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  6. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  7. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  8. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  9. ஈரோடு
    ஈரோடு தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா பழுது: ஆட்சியர் விளக்கம்
  10. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...