/* */

ஆவடி: மது போதையில் தகராறு: பீர்பாட்டிலால் அடித்து வாலிபர் கொலை!

ஆவடி அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் பீர்பாட்டிலால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

HIGHLIGHTS

ஆவடி: மது போதையில் தகராறு: பீர்பாட்டிலால் அடித்து வாலிபர் கொலை!
X

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த பட்டாபிராம், உழைப்பாளர் நகர், 3வது தெரு சார்ந்தவர் பிரசாந்த்குமார் (25). இவர், மின்சார ரயிலில் பாப்கான் வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில், பிரசாந்த்குமார், தனது நண்பர்கள் நாகராஜ், ராமன் ஆகியோருடன் நெமிலிச்சேரி ஏரிக்கரை ஓரமாக மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அங்கு அப்பகுதியை சேர்ந்த சில வாலிபர்களும் மது அருந்தி உள்ளனர்.

அவர்கள் பிரசாந்த்குமாரிடம், நீங்கள் யார், எங்கள் ஏரியாவில் வந்து, ஏன் மது அருந்துகிறீர்கள் என கேட்டுள்ளனர். இதனையடுத்து இருதரப்புக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்பிறகு, அவர்களுக்குள் கைகலப்பும் ஏற்பட்டது. இதனையடுத்து, பிரசாந்த்குமார், தனது நண்பர்களுடன் அங்கிருந்து புறப்பட்டு உள்ளார். அப்போது, அக்கும்பல் இவர்களை பின்னால் பைக்கில் துரத்தி வந்துள்ளனர்.

பிரசாத்குமார் மற்றும் நண்பர்களை காந்திநகர், பாரதமாதா தெருவில் அக்கும்பல் வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். பிரசாந்த்குமாரை ஓட, ஓட விரட்டி கல்லாலும், பீர் பாட்டிலாலும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை பார்த்த நாகராஜ், ராமன் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இந்த தாக்குதலில் பிரசாந்த்குமார் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதனையடுத்து, அக்கும்பல் அங்கிருந்து பைக்குகளில் தப்பி சென்று தலைமறைவானார்கள். தகவலறிந்து பட்டாபிராம் உதவி கமிஷனர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மேலும், விசாரணையில், பிரசாந்த்குமார் கொலை செய்தது, அதே பகுதியை சேர்ந்த அஜித் தலைமையினான நண்பர்கள் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து, போலீசார் 3தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

Updated On: 15 Jun 2021 2:26 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  3. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  4. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  5. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  6. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  7. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  8. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்