/* */

ஆவடியில் பதுக்கி வைத்த ரூ. 5 கோடியிலான செம்மரங்கள் பறிமுதல்: 4 பேர் கைது

தேவரகொண்டா வனப்பகுதியில் இருந்து வேகமாக வந்த கார், நிறுத்தாமல் சென்றதை போலீசார் விரட்டிச்சென்று மடக்கிப் பிடித்ததனர்

HIGHLIGHTS

ஆவடியில்  பதுக்கி வைத்த ரூ. 5 கோடியிலான  செம்மரங்கள் பறிமுதல்: 4 பேர் கைது
X

சென்னை ஆவடியில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 5 கோடி மதிப்புள்ள 11 டன் செம்மரங்களை பறிமுதல் செய்து, ரெட்ஹில்ஸ் மற்றும் ஆவடியை சேர்ந்த 3 பேர் உள்பட 4 பேரை சித்தூர் போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து, சித்தூர் மாவட்ட எஸ்.பி. செந்தில் குமார் செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில், போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று மாலை 5 மணியளவில், பிளேர் கிராமிய காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முரளிகிருஷ்ணா மேற்பார்வையில், ரொம்பிசெர்லா எஸ்.ஐ. ஹரிபிரசாத் மற்றும் போலீசார், சின்னகொட்டிகல்லு மண்டலம், தேவரகொண்டா பகுதியில் வாகனங்களை சோதனை மேற்கொண்டனர்.

அவ்வழியாக, வனப்பகுதியில் இருந்து வேகமாக வந்த ஒரு கார், போலீசாரை கண்டதும் நிறுத்தாமல் சென்றது. போலீசார் அந்த வாகனத்தை விரட்டிச்சென்று காரை மடக்கிப்பிடித்தனர். காரை ஓட்டிச்சென்ற சித்தூர் மாவட்டம், சந்திரகிரி மண்டலம் ஐத்தேப்பள்ளி கிராமத்தை சேர்ந்த தயானந்தா (37) என்பவரை கைது செய்து காரில் இருந்த 8 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து, தயானந்தாவிடம் நடத்திய விசாரணையில், அவர் அளித்த தகவலின் அடிப்படையில், பிளேர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முரளிகிருஷ்ணா மற்றும் போலீசார், சென்னை அடுத்த ஆவடியில் ஒரு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 11 டன் எடை கொண்ட 388 செம்மரங்கள் மற்றும் ஒரு லாரி, 2 கார் என 3 வாகனங்களை பறிமுதல் செய்து ஆவடியை சேர்ந்த சங்கர் (27), ரெட்ஹில்ஸ் பகுதியை சேர்ந்த மனோஜ் குமார் (27), அசோக்குமார் (26) ஆகிய 3 பேரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரம் மற்றும் வாகனங்களின் மதிப்பு ரூ. 5 கோடி இருக்கும் என எஸ்.பி செந்தில் குமார் தெரிவித்தார்

Updated On: 2 Aug 2021 6:17 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  3. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  4. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  5. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  6. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  7. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  8. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  9. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு