/* */

மங்கலம் அருகே ஊட்டச்சத்து தானியம் பயன்படுத்த வேளாண்துறை ஊக்குவிப்பு

திருப்பூர் மங்கலம் அருகே நடந்த நிகழ்ச்சியில், ஊட்டச்சத்துமிக்க தானிய பயிர்களை சாகுபடி செய்ய விவசாயிகள் ஊக்குவிக்கப்பட்டனர்.

HIGHLIGHTS

மங்கலம் அருகே ஊட்டச்சத்து தானியம் பயன்படுத்த வேளாண்துறை ஊக்குவிப்பு
X

திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிராமத்தில், சிறுதானிய அபிவிருத்திக்காக, 100 விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. தேசிய உணவு பாதுகாப்பு திட்ட, மாவட்ட ஆலோசகர் அரசப்பன் பங்கேற்று, சிறுதானிய பயிரின் நன்மைகள், சாகுபடி முறை குறித்து விளக்கினார்.

அவர் கூறுகையில், 'சிறுதானிய பயிர் சாகுபடியால், மண் வளம் பாதுகாக்கப்படும். சிறுதானிய பயிர்களை மதிப்புக்கூட்டும் உணவு தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்குவதன் மூலம், கூடுதல் லாபம் பெற முடியும்,' என்றார்.

திருப்பூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் அருள்வடிவு, வேளாண்மை அலுவலர் சுகன்யா, துணை வேளாண்மை அலுவலர் ஈஸ்வரமூர்த்தி, உதவி வேளாண்மை அலுவலர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலரும் பங்கேற்று பேசினர்.

Updated On: 14 Jan 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  5. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  6. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  7. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா
  8. ஈரோடு
    ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்
  9. செய்யாறு
    திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுகவினர் தண்ணீா் பந்தல்கள் திறப்பு
  10. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...