/* */

நெல்லை தச்சநல்லூரில் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு பூங்காெத்து காெடுத்து வரவேற்பு

தச்சநல்லூர் ஊராட்சி தொடக்கப்பள்ளிக்கு வந்து குழந்தைகளுக்கு பூங்கொத்து கொடுத்து இனிப்பு வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

நெல்லை தச்சநல்லூரில் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு பூங்காெத்து காெடுத்து வரவேற்பு
X

தச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு பூங்கொத்து கொடுத்து இனிப்புகள் வழங்கி வரவேற்றனர். 

உலகம் முழுவதும் தொற்றுநோய் காரணமாக கடந்த சுமார் 2 வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. பெருந்தொற்று நோய் தற்பொழுது படிப்படியாக குறைந்து வரும் நிலையில் முதலில் கல்லூரி திறக்கப்பட்டன.

தொடர்ந்து மேல்நிலைப் பள்ளிகளும், உயர்நிலைப் பள்ளிகளும் திறக்கப்பட்ட நிலையில் இன்று முதல் தமிழக அரசின் உத்தரவுப்படி 1 ஆம் முதல் எட்டாம் வகுப்பு வரையிலான ஆரம்பப் பள்ளிகள் தமிழகம் முழுவதும் இன்று முதல் தொடங்கப்பட்டது. தொற்றுநோய் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கையாக வகுப்பறைகளை சுத்தம் செய்து மற்றும் பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து இன்று தச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் சங்கரிஸ்வரி, பாஜக தச்சநல்லூர் வர்த்தக அணி தலைவர் ஓம்சக்தி மாரியப்பன், நெல்லை குருநாதன் ஆகியோர் பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு பூங்கொத்து கொடுத்து இனிப்புகள் வழங்கி வரவேற்றனர். இந்நிகழ்வில் உதவி ஆசிரியர்கள் ராஜலட்சுமி பானுமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 2 Nov 2021 7:33 AM GMT

Related News

Latest News

  1. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  5. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  9. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  10. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்