தமிழகத்தில் 29 செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் பணியிட மாற்றம் விபரம்
திருநெல்வேலி மாவட்ட புதிய பி.ஆர்.ஓ-வாக ஜெய அருள்பதி இன்று சனிக்கிழமை (31.07.2021) பொறுப்பேற்றுக் கொள்கிறார்.
HIGHLIGHTS
திருநெல்வேலி மாவட்ட புதிய பி.ஆர்.ஓ-வாக ஜெய அருள்பதி இன்று சனிக்கிழமை (31.07.2021) பகல் 12 மணிக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறார்.
தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் 29 பி.ஆர். ஓ.க்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசு செயலாளர் மகேசன் காசிராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், திருநெல்வேலி மாவட்ட புதிய பி.ஆர்.ஓ-வாக ஜெய அருள்பதி இன்று சனிக்கிழமை (31.07.2021) பகல் 12 மணிக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறார்.
ஏற்கனவெ இங்கு பணியாற்றிய நவாஸ்கான் திண்டுக்கல் மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதே போல நிர்வாக நலன் கருதி, இராமநாதபுரம் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணிபுரியும் ஜெகவீர பாண்டியன் அங்கிருந்து இடமாற்றம் செய்து தூத்துக்குடி மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகப் பணிபுரியும் வெ.சீனிவாசன் பணியிடத்தில் பணியமர்த்தம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது. வெ.சீனிவாசன் கரூர் மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும்...
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் பணியிட மாற்றம் விபரம்.
1.பெரம்பலூர் -பாவேந்தன்
2.திருவள்ளுவர் மாவட்டம் -பாபு
3.வேலூர் மாவட்டம் - சுப்பையா
4.திருப்பத்தூர் மாவட்டம் - ராமகிருஷ்ணன்
5.புதுக்கோட்டை மாவட்டம் - மதியழகன்
6.திருவண்ணாமலை மாவட்டம் - லோகநாதன்
7.தலைமையிட நினைவகங்கள்- சுவாமிநாதன்
8.செய்தி வெளியீட்டுப் பிரிவு- முத்தமிழ்ச் செல்வன்
9.திருநெல்வேலி மாவட்டம் -ஜெய அருள்பதி
10.தூத்துக்குடி மாவட்டம்- ஜெகவீரபாண்டியன்
11.திண்டுக்கல் மாவட்டம்-நவாஸ் கான்
12.மதுரை மாவட்டம்-சாளி தளபதி
13.கரூர் மாவட்டம் -சீனிவாசன்
14. விருதுநகர் மாவட்டம் சீனிவாசன்
15. மாநில செய்தி நிலையம் ரமேஷ்
16. திரைப்படப் பிரிவு சரவணன்
17. சென்னை மாவட்டம் கோவலன்
18. கள்ளக்குறிச்சி மாவட்டம் -சரவணன்
19. கோயம்புத்தூர் மாவட்டம்-செந்தில் அண்ணா
20.ராமநாதபுரம் மாவட்டம் - நவீன் பாண்டியன்
21. தேனி மாவட்டம்- சண்முகசுந்தரம்
22. டெல்லி -ஷேக் முகமது
23. திருவாரூர் மாவட்டம் - செல்வகுமார்
24.நாகப்பட்டினம் மாவட்டம் - தனபால் 25.தர்மபுரி மாவட்டம் - அண்ணாதுரை
26. கலைவாணர் அரங்கம் திவாகர்
27. கிருஷ்ணகிரி மாவட்டம் - மோகன்
28. அரியலூர் மாவட்டம் - சுருளி பிரபு
29.தஞ்சாவூர் மாவட்டம் -பிரேமலதா
இவ்வாணை உடனடியாக நடைமுறைக்கு வருகிறது என அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.