Begin typing your search above and press return to search.
பள்ளிகளுக்கு நாளை முதல் அரையாண்டு விடுமுறை: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
பள்ளிகளுக்கு நாளை முதல் அரையாண்டு விடுமுறை என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நெல்லையில் இன்று அறிவித்து உள்ளார்.
HIGHLIGHTS
தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று நெல்லையில் பல்வேறு நிகழ்ச்சிளில் கலந்து கொண்டார். நெல்லை சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் சமீபத்தில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் இறந்த மாணவர்களின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்த அமைச்சர் அவர்களது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அசைமச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு டிசம்பர் 24ம் தேதியான நாளை முதல் ஜனவரி 2ம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவித்தார்.