Begin typing your search above and press return to search.
நெல்லையில் 32வது வார்டு அமமுக நிர்வாகி அதிமுகவில் இணைவு
நெல்லையில் அமமுக 32வது வட்ட கழக செயலாளர் அப்துல் காதர், அதிமுக மாவட்ட செயலாளர் தச்சை- கணேசராஜா தலைமையில் இணைந்தார்.
HIGHLIGHTS
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த வார்டு வட்ட கழகச் செயலாளர் அண்ணா திராவிட முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் தலைமையில் அதிமுகவில் இணைந்தார்.
திருநெல்வேலி மாவட்ட கழக அலுவலகத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த 32 வது வார்டு வட்ட கழக செயலாளர் P.M.அப்துல் காதர் திருநெல்வேலி மாவட்ட கழக செயலாளர் தச்சை என். கணேசராஜா தலைமையில் மேலப்பாளையம் மேற்குப் பகுதி கழக செயலாளர் S.S.ஹயாத் முன்னிலையில் தாய் கழகமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.
இதில் முன்னாள் தொகுதி செயலாளர் A.P.பால் கண்ணன் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.