Begin typing your search above and press return to search.
அம்பாசமுத்திரத்தில் முன்கள பணியாளருக்கான ஒருநாள் கொரோனா விழிப்புணர்வு பயிற்சி
அம்பாசமுத்திரம் நகராட்சியில் முன்கள பணியாளருக்கான ஒருநாள் பயிற்சி கொரோனா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
HIGHLIGHTS
நெல்லைமாவட்டம், அம்பாசமுத்திரம் நகராட்சியில் கொராேனா விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, நகராட்சி முன்களப் பணியாளருக்கான ஒருநாள் கொராேனா தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.
சித்த மருத்துவர்களை கொண்டு நடத்தபட்ட பயிற்சி முகாமை, நகராட்சி ஆணையாளர் பார்கவி தலைமையேற்று துவக்கி வைத்தார்.
முகாமில் அரசு சித்த மருத்துவர் உலகநாயகி மருத்துவர் அழகிய நம்பி ஆகியோர் விழிப்புணர்வு பயிற்சி அளித்தனர். நகராட்சி சுகாதார ஆய்வாளர் பொன் வேல்ராஜ், மேலாளர் ராமசுந்தரமணி மற்றும் நகராட்சி ஊழியர்கள் கலந்துகொண்டனர்.