/* */

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் கழிவு பொருட்களில் இருந்து, விளையாட்டு பொருட்கள் தயாரிக்கும் இணையவழி பயிற்சி

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் கழிவு பொருட்களில் இருந்து பயனுள்ள பொருட்கள் தயாரிப்பது குறித்த இணைய வழி பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.

HIGHLIGHTS

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் கழிவு பொருட்களில் இருந்து, விளையாட்டு பொருட்கள் தயாரிக்கும் இணையவழி பயிற்சி
X

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் கழிவு பொருட்களில் இருந்து விளையாட்டு பொருட்கள் தயாரிப்பு குறித்து நடந்த இணையவழி பயிற்சி.

நெல்லை அரசு அருங்காட்சியகம் மற்றும் NPNK கலை பண்பாடு மன்றம் இணைந்து நடத்திய இணையவழி கைவினைப் பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்றது.

இப்பயிற்சியில் கழிவு பொருட்களில் இருந்து அழகான கலைப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியினை மாவட்டக் காப்பாட்சியர் சிவ. சத்திய வள்ளி துவங்கி வைத்தார்.

பயிற்சியினை இணையவழியில் நெல்லை மாவட்ட சிரட்டை சிற்பி. வே. ஆனந்த பெருமாள் நடத்தினார். இன்று நடைபெற்ற பயிற்சியில் பழைய அட்டை, பெட்டிகள் கொண்டு சிறுவர்கள் விளையாட்டு பொருட்களான விமானம், குருவிகள் மற்றும் கைபேசி வைக்கும் ஸ்டாண்ட் ஆகியவை உருவாக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழகத்தின் பல்வேறு மாவ்ட்டங்களை சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவ- மாணவியர் மற்றும் மகளிர் மிகவும் ஆர்வத்துடன் இப்பயிற்சியில் கலந்து கொண்டனர். NPNK கலை பண்பாடு மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் மு.வெ.ரா. நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து நடத்தினார்.

Updated On: 18 Jun 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  3. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  4. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  5. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  6. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  7. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  8. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை