/* */

திருச்சியில் ஆன்லைனில் நூதன முறையில் மோசடி செய்த ரூ.13 ஆயிரம் மீட்பு

ஆன்லைனில் நூதன முறையில் மோசடி. திருச்சி சைபர் கிரைம் போலீசார் விசாரணை செய்து பணத்தை மீட்டனர்.

HIGHLIGHTS

திருச்சியில் ஆன்லைனில் நூதன முறையில் மோசடி செய்த ரூ.13 ஆயிரம் மீட்பு
X

திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 78). இவர் திருச்சி வயலூர் ரோடு பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். கடந்த 26-ந் தேதி ராமசாமி ஆன்லைன் வர்த்தகம் மூலமாக செல்போன் வாங்க ஆர்டர் செய்தார். அப்போது அவரது செல்போனுக்கு எதிர்முனையில் பேசிய நபர் ரூ.13 ஆயிரத்தை அனுப்பினால் செல் போன் வீடு தேடி வரும் என்று கூறி உள்ளார். இவரும் ஆன்லைன் மூலமாக பணத்தை அனுப்பியுள்ளார். ஆனால் 3 நாட்கள் ஆகியும் செல்போன் வராததால் ராமசாமி அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து திருச்சி மாநகர சைபர்கிரைம் போலீசில் புகார் கொடுத்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிந்துநதி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி ராமசாமியிடம் ஆன்லைன் மூலம் செலுத்திய ரூ.13 ஆயிரத்தை மீட்டனர். பின்னர் அந்த பணத்தை நேற்று காலை திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீஸ் அலுவலகத்தில் வைத்து ராமசாமியிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

Updated On: 30 Nov 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்வில் வெற்றி பெற வழிகள்
  3. தேனி
    மாயாவதிக்கு பிரதமர் பதவி! பகுஜன் சமாஜ் கட்சி ஆசை!
  4. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முருகன் கோவில் பாலாலாலயம்
  5. திருமங்கலம்
    மீனாட்சி திருக்கல்யாணம் என்பது தெய்வத் திருமணம்!
  6. வீடியோ
    KKR -ஐ கிழித்து தொங்க விட்ட Bairstow ! Master Blaster Chase !...
  7. அரசியல்
    மோடியை பார்த்து எதிர்க்கட்சிகள் கலங்குவதன் காரணம் என்ன?
  8. பொன்னேரி
    ஜிஎப்சி குலோபல் பப்ளிக் பள்ளியில் விளையாட்டு போட்டி!
  9. திருப்பரங்குன்றம்
    கோயில்களில், இன்று மாலை சங்கடஹரசதுர்த்தி விழா!
  10. வேலூர்
    வாட்டி வதைக்கும் வெயில்! வேலூர் மக்கள் அவதி!