/* */

திருச்சி மாநகரில் காணாமல் போன 20 பேரில் 16 பேர் மீட்பு

திருச்சி மாநகரில் காணாமல் போன 20 பேரில் 16 பேரை போலீசார் மீட்டுள்ளனர்.

HIGHLIGHTS

திருச்சி மாநகரில் காணாமல் போன 20 பேரில் 16 பேர் மீட்பு
X

திருச்சி மாநகரத்தில் இந்த மாதத்தில் காணாமல் போன 20 பேரில் 16 பேர் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடிவருகிறார்கள். இதில் குடும்ப பிரச்சினை காரணமாக அரசு மருத்துவமனை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட புத்தூரைச் சேர்ந்த கிருத்திகா (வயது 28) என்பவர் தனது 2 குழந்தைகளுடன் கோபித்துக்கொண்டு சென்றுவிட்டதாக அவரது கணவர் கொடுத்த புகாரின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் 3 பேரும் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அதேபோல் கடந்த 21-ந்தேதி அரியமங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அரியமங்கலம் திடீர்நகரை சேர்ந்த 2-ம்வகுப்பு படிக்கும் சிறுவனும், 7-ம்வகுப்பு படிக்கும் சிறுமியும் மாயமானார்கள். இது குறித்த புகாரின் பேரில் இருவரையும் 24 மணி நேரத்தில் தேடி கண்டுபிடித்து அவரது தாயாரிடம் போலீசார் ஒப்படைத்தனர். புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, காணாமல் போனவர்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைத்த போலீசாரை திருச்சி போலீஸ் கமிஷனர் ஜி.கார்த்திகேயன் பாராட்டினார்.

Updated On: 23 Jan 2022 2:44 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  2. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  5. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. லைஃப்ஸ்டைல்
    ரக்கட் மேற்கோள்கள் தமிழில்...!
  9. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  10. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்