/* */

திருவானைக்காவலில் ஆடிட்டர் வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை

திருச்சி திருவானைக்காவலில், ஆடிட்டர் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகளை கொள்ளையடித்தது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

HIGHLIGHTS

திருவானைக்காவலில் ஆடிட்டர் வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை
X

கொள்ளை நடந்த வீடு. 

திருச்சி திருவானைக்காவல் கொண்டையம்பேட்டை அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 62). இவர் ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு தனது மகளை சென்னையில் ஒரு நிறுவனத்தில் வேலையில் சேர்த்து விடுவதற்காக சென்றார்.

நேற்று பகல் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்புற கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர், வீட்டினுள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த மோதிரம், தங்க சங்கிலி, வளையல் உள்பட 30 பவுன் நகைகள் மற்றும் ரூ.30 ஆயிரம் கொள்ளை போய் இருந்தது. பீரோவில் தனியாக வைத்து இருந்த ரூ.20 ஆயிரம் மட்டும் திருட்டு போகாமல் அப்படியே இருந்துள்ளது.

இது குறித்து, ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து உதவி கமிஷனர் சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். விரல் ரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் பொன்னி வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த இடத்தில் மோப்பம் பிடித்து விட்டு தெருவின் திருப்பம் வரை சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது. இச்சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, இதில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Updated On: 6 Jan 2022 4:00 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  2. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  3. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  5. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  6. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  7. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  8. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  9. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  10. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!