/* */

வியாபாரி பைக்கில் ரூ.1.58 லட்சம் பணம் திருடிய வாலிபர் கைது

வியாபாரி பைக்கில் ரூ.1.58 லட்சம் பணம் திருடிய வாலிபர் கைது
X

தூத்துக்குடியில் மீன் வியாபாரி பைக்கில் வைத்திருந்த பணம் ரூ.1.58 லட்சத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி பூபால்ராயர்புரம் 4வது தெருவைச் சேர்ந்தவர் அலெக்ஸ் கோமஸ் (62), மீன் வியாபாரியான இவர் கடந்த மாதம் 30ம் தேதி மீன்களை ஏலம் எடுப்பதற்காக, தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவரது மோட்டார் பைக்கில் வைத்திருந்த ரூ.1லட்சத்து 58ஆயிரம் பணம் திருடு போனது.

இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் அவர் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். போலீசாரின் விசாரணையில், தூத்துக்குடி பாத்திமா நகரைச் சேர்ந்த ரோசாரி மகன் ஏத்தேல்பத் (32) என்பவர் பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து ரூ.1லட்சத்து 58 ஆயிரம் பணத்தை மீட்டு அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 16 April 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  3. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  4. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  5. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  6. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  8. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  9. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  10. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?