/* */

தூத்துக்குடி-உப்பு உற்பத்தி இல்லாத நிலை-கடும் விலையேற்றம்-உற்பத்தியாளர்கள் வேதனை

தூத்துக்குடி உப்பு உற்பத்தி இல்லாத நிலையில் கடும் விலையேற்றத்தால் உற்பத்தியாளர்கள் வேதனை - சிறப்பு செய்திதொகுப்பு

HIGHLIGHTS

தூத்துக்குடி-உப்பு உற்பத்தி இல்லாத நிலை-கடும் விலையேற்றம்-உற்பத்தியாளர்கள் வேதனை
X


தூத்துக்குடி உப்பு உற்பத்தி இல்லாத நிலையில் கடும் விலையேற்றத்தால் உற்பத்தியாளர்கள் வேதனை -

சிறப்பு செய்திதொகுப்பு

தூத்துக்குடி 


தமிழகத்தின் தென்கோடியில் அமைந்துள்ள தூத்துக்குடி வரலாற்று சிறப்பு வாய்ந்தது . இங்கு உப்பு தொழில் பிரதானமாக செய்யப்பட்டு வருகிறது. மீன்பிடித் தொழிலுக்கு அடுத்தபடியாக உப்புத் தொழிலை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 1 லட்சம் தொழிலாளர்கள் அவர்களின் வாழ்வை கட்டமைத்து வாழ்ந்து வருகின்றார்கள்.

ஒரு ஆண்டின் ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை நிலவிடும் பருவ காலத்தை பொறுத்து உப்பு உற்பத்தி நடைபெறும். இக்காலகட்டத்தில் விளைவிக்கப்படும் உப்பு கிட்டங்கிகளில் சேமிக்கப்பட்டு வருடம் முழுவதற்கும் தேவையான இடங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படும். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை அவ்வபோது பெய்து வரும் மழையின் காரணமாக இந்த ஆண்டு உப்பு உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இருப்பு வைக்கப்பட்டிருந்த உப்புகளும் தற்சமயம் விற்று தீர்ந்து விட்டதால் இந்த ஆண்டில் உப்பு உற்பத்தி அறவே நடைபெறாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உப்பு தட்டுப்பாடு நிலவி வருகின்றது.


இதுகுறித்து தன்பாடு உப்பு உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் தேன்ராஜ் கூறுகையில், ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் உப்பு உற்பத்தி நடைபெறும் காலங்களில் ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய நான்கு மாதங்கள் மட்டும்தான் மிக முக்கியமானது. இம்மாதங்களில் தான் அதிகபட்சமாக உப்பு உற்பத்தி செய்யப்படும்.

ஆனால் தூத்துக்குடியில் அடிக்கடி பெய்த மழையின் காரணமாக உப்பு வயல்களில் விளைச்சல் அறவே இல்லாமல் இருக்கிறது. 10 நாட்கள் தொடர் வெப்பத்தால் விளைவிக்கப்படும் உப்பை வாறுகால் நினைக்கையில் மறுநாள் மழை வந்து விளைந்த உப்பை கரைத்து விடுகிறது. இதுபோன்றே ஒவ்வொரு முறையும் உப்பு உற்பத்தியை மழை பாழ்படுத்தி வருகிறது. எனவே இந்த ஆண்டு கையிருப்புக்கு கூட உப்பு உற்பத்தி நடைபெறவில்லை.

ஆண்டுக்கு 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி நடைபெறும் இடத்தில் இதுவரை 4 லட்சம் டன் கூட உப்பு உற்பத்தி நடைபெறவில்லை. விவசாயம் போன்று முற்றிலும் இயற்கையை சார்ந்து உப்பு விளைவித்தல் தொழில் செய்யப்படுகிறது. ஆகவே வெப்பம் இருந்தால் மட்டுமே உப்பு விளைச்சல் செய்ய முடியும். ஆனால் இயற்கையின் மாற்றத்தின் காரணமாக மழை பெய்து உப்பு உற்பத்தி செய்ய முடியாததால் உப்புக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

தற்பொழுது உப்பு உற்பத்தியை நிவர்த்தி செய்ய குஜராத் மாநிலத்திலிருந்து கன்டெய்னர்களில் உப்பு இறக்குமதி செய்யப்பட்டு பிற பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் காரணமாக உப்பு விலை நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. விலை உயர்வினால் வியாபாரிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் எந்த லாபமும் இல்லை.

ஏனெனில் உப்பு விளைவிக்க முடியாததால் உப்பள தொழிலை நம்பி உள்ள உப்பு வாறுவோர், பார்சல் கட்டுவோர், தரம் பிரிப்போர், வாகன ஓட்டுநர்கள், உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே மத்திய மாநில அரசாங்கங்கள் தொழிலாளர்களின் நலனுக்காக கூடிய விரைவில் உரிய நடவடிக்கை எடுத்தால் உப்பு உற்பத்தி தொழிலை பாதுகாக்க முடியும் என்றார்.

கடந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 22 லட்சம் டன் உப்பு உற்பத்தி நடைபெற்ற நிலையில் டன் ஒன்று ரூ.800 முதல் 1200 வரை விலை நிர்ணயிக்கப்பட்டு வர்த்தக ரீதியாக கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி நடைபெறாத நிலையில் உள்ளூர் தேவைக்கு கூட குஜராத் மாநிலத்திலிருந்து கண்டெய்னர்களில் உப்பு இறக்குமதி செய்யப்படுகிறது.

ஒரு கண்டெய்னரில் 28 டன் உப்பு அடைக்கப்படுகிறது. இவ்வாறாக ஒரு வாரத்திற்கு அதிகபட்சம் 150 கண்டெய்னர்களில் இறக்குமதி செய்யப்படும் உப்பு டன் ஒன்றுக்கு ரூ.3800 முதல் 4500 வரை விலை உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த விலையேற்றத்தால் யாருக்கும் எந்த பலனும் இல்லை என்பது தான் உப்பு உற்பத்தியாளர்கள் வேதனை...

Updated On: 27 May 2021 9:51 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  3. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  5. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  6. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  7. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...
  8. திருவண்ணாமலை
    வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறை: ஆட்சியர்...
  9. திருவண்ணாமலை
    முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
  10. நாமக்கல்
    சைபர் கிரைம் குற்றவாகளிடம் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எஸ்.பி...