Begin typing your search above and press return to search.
தூத்துக்குடியில் இன்று 149 பேருக்கு கொரோனா, 5 பேர் உயிரிழப்பு
தூத்துக்குடியில் இன்று 149 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது சிகிச்சை பலன் இன்றி 5 பேர் உயிரிழந்தனர்.
HIGHLIGHTS
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக குறைந்து வருகிறது. இந்நிலையில் இன்று மேலும் 149 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை முடிவில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 53,162ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 313 போ் இன்று குணமடைந்தனர். இதுவரை 50,536 போ் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். கொரோனா பாதிப்பால் 5 பேர் உயிரிழந்தனர். இறப்பு எண்ணிக்கை 363ஆக அதிகரித்துள்ளது. தற்போது மாவட்டத்தில் 2266 போ் கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.