/* */

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா வழக்கில் கைதான 224 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம்…

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் வழக்குகளில் கைதான 224 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது என திருநெல்வேலி சரக டிஐஜி பிரவேஷ் குமார் தெரிவித்தார்.

HIGHLIGHTS

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா வழக்கில் கைதான 224 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம்…
X

ரோந்து வாகனங்களை டிஐஜி பிரவேஷ்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழக காவல் துறையினர் ரோந்துப் பணிக்கு பயன்படுத்துவதற்காக கூடுதல் வாகனங்களை தமிழக அரசு சமீபத்தில் வழங்கியது. அதன்படி, தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் ரோந்துப் பணிக்காக தலா ரூ. 9.25 லட்சம் மதிப்புள்ள 7 நான்கு சக்கர ரோந்து வாகனங்களை அரசு வழங்கியது.

அந்த வாகனங்களின் ரோந்துப் பணியை தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் முன்னிலையில், திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ் குமார் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் சந்தீஸ், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுடலைமுத்து, உதவி ஆய்வாளர் கணேச மணிகண்டன் உள்ளிட்ட காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்ட காவல் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரோந்து வாகனங்கள் தூத்துக்குடி தென்பாகம், வடபாகம், மத்தியபாகம், தாளமுத்துநகர், சிப்காட், முத்தையாபுரம் மற்றும் தெர்மல்நகர் ஆகிய காவல் நிலைய ரோந்துப் பணிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தொடர்ந்து, திருநெல்வேலி சரக காவல் துணைத் தலைவர் பிரவேஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 38 பேர் மற்றும் போக்ஸோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 14 ரேக் உட்பட 238 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த ஆண்டு கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டதாக 149 வழக்குகள் பதிவு செய்து 256 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 679 கிலோ கஞ்சா மற்றும் 5 கிலோ கஞ்சா எண்ணெய் மற்றும் 50 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், கஞ்சா வழக்குகளில் ஈடுபட்டதாக கைதானவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் உட்பட மொத்தம் 224 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததாக 1060 வழக்குகள் பதிவு செய்து 1132 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 9034 கிலோ புகையிலைப் பொருட்கள் மற்றும் 46 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 67 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆண்டு இதுவரை சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்ததாக 3493 வழக்குகள் பதிவு செய்து 3534 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 7730 லிட்டர் மதுபானம் மற்றும் 86 போதை மாத்திரைகள் 43 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என காவல் துணைத் தலைவர் பிரவேஷ்குமார் தெரிவித்தார்.

Updated On: 14 Nov 2022 10:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!