/* */

கொரோனா நோயாளிகளுக்கு இலவச உணவு திட்டம்: கனிமொழி எம்பி தொடங்கினார்

கொரோனா நோயாயளிகளுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

கொரோனா நோயாளிகளுக்கு இலவச உணவு திட்டம்: கனிமொழி எம்பி தொடங்கினார்
X

கொரோனா நோயாளிகளுக்கான இலவச உணவு திட்டத்தை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தபோது.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் முன் களப்பணியாளர்கள் மற்றும் கொரோனா நோயாளிகளுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கனிமொழி எம்பி, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கலந்துகொண்டு முன்கள பணியாளர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினர்.

அப்போது அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக முதலமைச்சரின் உத்தரவுப்படி முன்கள பணியாளர்கள், கொரோனா நோயாளிகள் மற்றும் அவருடன் இருப்பவர்களுக்கு தினசரி மூன்று வேளையும் உணவு வழங்க இந்து சமய அறநிலைத்துறை சார்பில் இலவசமாக உணவு வழங்க வேண்டும் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்தரவு பிறப்பித்தார்.

அதன் அடிப்படையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் காலை உணவு சங்கர ராமேஸ்வரர் பாகம்பிரியாள் கோவில் நிர்வாகம் சார்பில் 650 பேருக்கும், மதிய உணவு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சார்பில் ஆயிரம் பேருக்கும், இரவு உணவு குலசேகரபட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் சார்பில் 300 பேருக்கும் வழங்கப்பட உள்ளது. இந்த அளவு தேவையின் அடிப்படையில் அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், இந்து சமய அறநிலையத்துறை தூத்துக்குடி மண்டல இணை ஆணையர் அன்புமணி, மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரேவதி மற்றும் அலுவலர்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள் உடனிருந்தனர்.

Updated On: 15 May 2021 3:54 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  2. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  3. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. நாமக்கல்
    சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...
  8. நாமக்கல்
    கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது
  9. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  10. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு