தூத்துக்குடி அருகே பயங்கரம் செல்போனில் கேம் விளையாடிய தங்கை கொலை : அண்ணன் கைது.

செல்போனில் கேம் விளையாடிய தங்கையை கொலை செய்த அண்ணன் கைது

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo

துாத்துக்குடி அருகே வசவப்பபுரம் பகுதியில் செல்போனில் கேம் விளையாடிய தங்கையை அரிவாளால் வெட்டி கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள வசவப்பபுரம் பகுதியில் பசும்பொன் நகரை சேர்ந்தவர் சுடலை. விவசாயம் செய்து வரும் இவருக்கு மனைவியும் மாலைராஜா (20) என்ற மகனும் கவிதா (17) என்ற மகளும் உள்ளனர். கவிதா பிளஸ் டூ படித்துள்ளார் இந்தநிலையில் கவிதா தனது செல்போன் மூலம் கேம் விளையாடுவது பேஸ்புக்கில் ஷேர் செய்வது வாட்ஸ் அப்பில் மீம்ஸ் போடுவது என தொடர்ந்து விளையாடிக்கொண்டிருந்தார். இதை அவரது அண்ணன் மாலைராஜா கண்டித்துள்ளார். பல தடவை கண்டித்தும் கவிதா செல்போனில் விளையாடுவதை நிறுத்தவில்லை. இந்நிலையில் இன்று மாலை கவிதா செல்போனில் நண்பருக்கு வாட்ஸ் ஆப்பில் சேர் செய்து கொண்டிருந்தார். இதை பார்த்த அவரது அண்ணன் மாலை ராஜா சத்தம் போட்டுள்ளார். இதனால் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த அண்ணன் மாலை ராஜா வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தங்கை கவிதாவை வெட்டியுள்ளார். உடம்பு முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட இடத்தில் அரிவாள் வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் கவிதா துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பின்னர் அங்கிருந்து மாலை ராஜா தப்பியோடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று கவிதாவின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி பொன்னரசு ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.தப்பி ஓடிய மாலை ராஜாவை வல்லநாடு காட்டுப்பகுதியில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

Updated On: 29 Jun 2021 3:40 PM GMT

Related News

Latest News

  1. புதுக்கோட்டை
    நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா
  2. கும்பகோணம்
    சிறப்பு மருத்துவ முகாமினை துவக்கி வைத்து பார்வையிட்ட மாவட்ட...
  3. வேலைவாய்ப்பு
    ஏர் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள்
  4. சோழவந்தான்
    ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம்:...
  5. திருப்பரங்குன்றம்
    மதுரையில் ஏப்ரல் மாதம் முதல் 24 மணி நேர விமான சேவை
  6. தேனி
    தொடங்க போகிறது அரசியல் போர் .. வலிமையுடன் திருப்பி அடிக்குமா திமுக ?
  7. பவானிசாகர்
    ஈரோடு தொட்டபுரத்தில் 46அடி விஸ்வரூப ஸ்ரீ ருத்ர ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில்...
  8. இந்தியா
    36 செயற்கை கோள்களை செலுத்த இந்தியாவிடம் கையேந்தும் பிரிட்டன்
  9. சினிமா
    கல்யாணம் என் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது:...
  10. குமாரபாளையம்
    கோம்பு பள்ளம் தூய்மை பணிக்கு மினி பொக்லின்: நகராட்சி நிர்வாகம்