/* */

தமிழகத்தில் சனாதன சித்தாந்தங்களை புகுத்த முயற்சிக்கும் பாஜக.. துரை வைகோ குற்றச்சாட்டு…

தமிழகத்தில் சனாதன சித்தாந்தங்களை புகுத்த பாரதிய ஜனதா கட்சி முயற்சி செய்து வருகிறது என மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ குற்றம்சாட்டினார்.

HIGHLIGHTS

தமிழகத்தில் சனாதன சித்தாந்தங்களை புகுத்த முயற்சிக்கும் பாஜக.. துரை வைகோ குற்றச்சாட்டு…
X

கோவில்பட்டியில் நடைபெற்ற கூட்டத்தில் மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ பேசினார்.

தூத்துக்குடி மாவட்ட மதிமுக சார்பில், கோவில்பட்டி தனியார் திருமண மண்டபத்தில் வைத்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளிடம் குறைகளை கேட்றியும் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து எடுத்துரைத்தார்.


நிகழ்ச்சியில், மதிமுக துணைப் பொதுச் செயலாளர் ராஜேந்திரன், மாவட்டச் செயலாளர் ரமேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் விநாயகா ரமேஷ், நகரச் செயலாளர் பால்ராஜ், மத்திய பகுதி ஒன்றிய செயலாளர் சரவணன் உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தின்போது, விவசாயிகளின் கோரிக்கைகளை துரை வைகோ கேட்டறிந்தார்.

பின்னர், மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ செய்தியாளரிடம் கூறியதாவது:

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக கிராம மக்களிடம் கருத்து கேட்டு விவசாய நிலங்கள் பாதிப்பு ஏற்படாதவாறு அமைக்கபடும் என மாநில அரசு விளக்கம் கொடுத்துள்ளது.செண்பகா நதி அணைக்கட்டு திட்டம் நீண்ட கால பிரச்சினை தீர்வு காண மதிமுக சார்பில் தமிழக அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்கப்படும்.

விலை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்யும் காட்டுப் பன்றிகளை தடுக்க நிரந்தர தீர்வு என்பது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் அட்டவணையில் மூன்றில் இருந்து ஐந்திற்கு மாற்றினால் மட்டுமே இந்த காட்டுப் பன்றிகளின் நடமாட்டத்தை தடுக்க முடியும்.

பெட்ரோல், டீசல், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணம் மத்திய அரசுதான். பாஜக மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைவாக இருக்கிறது என்று அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறி வருவது ஊரை ஏமாற்றும் வேலை.

பாஜக ஆளும் மாநிலத்தில் ஊழல் இல்லையா? வாரிசு அரசியல் இல்லையா? என பார்க்க வேண்டும். அவர், கண்ணாடி கூண்டுக்குள் இருந்து கொண்டு கல் எறியக் கூடாது. 70 வருடமாக திராவிட இயக்கங்கள் பொய்யை விதைத்து மக்களை ஏமாற்றி வருவதாக அண்ணாமலை கூறி வருகிறார்.

திராவிட இயக்கங்களின் கொள்கையில் குழி தோண்டி புதைத்து சனாதான தத்துவங்களையும், சித்தாந்தங்களையும் தமிழகத்தில் புகுத்துவதற்கு பாஜகவினர் அலைந்து கொண்டிருக்கிறார்கள். கூட இருந்தே பாரதிய ஜனதா கட்சி குழி பறித்துக் கொண்டிருக்கிறது என்பதை அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உணர வேண்டும்.

பாஜகவின் சனாதான சக்திகளை தமிழகத்தில் இருந்து வேரோடு அகற்றுவதற்கு திமுக மற்றும் மதிமுகவுக்கு மட்டும் கடமை இல்லை. அதிமுகவிற்கும் அந்த கடமை இருக்கிறது. மதுவிலக்கு கொள்கை என்பது எங்களுடைய கட்சியின் முக்கியமான கொள்கை. அது தொடர்பாக தமிழரசுக்கு உரிய அழுத்தம் கொடுப்போம் என துரை வைகோ தெரிவித்தார்.

Updated On: 21 Dec 2022 5:21 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  2. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  3. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  4. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  6. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  7. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  10. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...