Begin typing your search above and press return to search.
தேவதானப்பட்டி அருகே வேன், ஆட்டோ மாேதி விபத்து: ஆட்டோ டிரைவர் உயிரிழப்பு
தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே ஆட்டோவும், வேனும் மோதி கொண்ட விபத்தில் ஆட்டோ டிரைவர் உயிரிழந்தார்.
HIGHLIGHTS
தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே ஆட்டோவும், வேனும் மோதிக் கொண்ட விபத்தில் ஆட்டோ டிரைவர் உயிரிழந்தார்.
தேவதானப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த சேகர் என்பவர் மகன் வெள்ளைப்பாண்டி, (வயது 21). ஆட்டோ டிரைவரான இவர், புல்லக்காபட்டி அருகே ஆட்டோ ஓட்டி வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த வேன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த வெள்ளைப்பாண்டி உயிரிழந்தார். தேவதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.