/* */

கம்பம் புதுப்பட்டி, அனுமந்தன்பட்டியில் 20 நாட்களாக குடிநீர் சப்ளை துண்டிப்பு

கம்பம் அருகே உள்ள க.புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி பேரூராட்சிகளில் 20 நாட்களுக்கும் மேலாக குடிநீர் சப்ளை இல்லை.

HIGHLIGHTS

கம்பம் புதுப்பட்டி, அனுமந்தன்பட்டியில் 20 நாட்களாக குடிநீர் சப்ளை துண்டிப்பு
X

லோயர்கேம்ப் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் கூடலுார், கம்பம், புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, உத்தமபாளையம், தேவாரம் உட்பட பல குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் சப்ளையாகி வருகிறது. இந்த பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டு உடைப்பினை சரி செய்யும் பணிகள் நடக்கிறது. இந்நிலையில் மற்ற குடியிருப்பு பகுதிகளுக்கு மாற்றுத்திட்டங்களின் மூலம் அவ்வப்போது குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. ஆனால் க.புதுப்பட்டிக்கும், அனுமந்தன்பட்டிக்கும் மாற்றுத்திட்டங்கள் இல்லை. இதனால் இந்த பகுதிகளில் 20 நாட்களுக்கும் மேலாக குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அருகில் உள்ள தோட்டங்களுக்கு சென்று குடிநீர் பிடித்து வரும் அளவுக்கு சிக்கல் நீடிக்கிறது.

Updated On: 8 May 2022 3:35 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  3. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  7. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  8. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  9. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா
  10. ஈரோடு
    ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்