Begin typing your search above and press return to search.
விவசாயிகளுக்கு இழப்பீடு: திருவிடைமருதூரில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக்கோரி, திருவிடைமருதூரில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
HIGHLIGHTS
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி, திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, அதிமுக முன்னாள் எம்பி ஆர்கே. பாரதிமோகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் ஏவிகே. அசோக்குமார், கருணாநிதி, முத்துகிருஷ்ணன் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இதில் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.