Begin typing your search above and press return to search.
குழந்தை இல்லாத விரக்தியில் கூலி தொழிலாளி தற்கொலை
தஞசாவூர் அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
HIGHLIGHTS
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே வாண்டையார் இருப்பு பகுதியை சேர்ந்தவர், மதியழகன் (37). இவருக்கு திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகிறது. இவரது மனைவி தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு இதுவரை குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் மதியழகன் குடிப்பழகத்திற்கு அடிமையாகி, தினமும் குடித்து வந்துள்ளார், அதிக மனஉளைச்சலுக்கு ஆளான அவர் மது குடித்து குடித்து விட்டு, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை வருகின்றனர்.