புதிய அரசு விவசாயத்துறையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்
தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் பதவி ஏற்கும் புதிய அரசு விவசாய துறையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என டெல்டா விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்
HIGHLIGHTS
நாளை மறுதினம் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்கும் ஸ்டாலினுக்கு டெல்டா விவசாயிகள் சார்பாக பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர், இது குறித்து விவசாய தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த ஜீவக்குமார் கூறுகையில்,
மற்ற துறைகளை விட விவசாயத் துறையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், திமுக தேர்தல் அறிக்கையில் விவசாயத்திற்கு தனி பட்ஜெட் என அறிவித்தது போல் இந்தியாவிலேயே முதல் முறையாக அதை தமிழகத்தில் செயல்படுத்தி முன்னோடி மாநிலமாக திகழ வேண்டும்.
விவசாயிகள் கடந்த காலங்களில் விவசாய கடன்கள் தள்ளுபடி என்பது ஏகப்பட்ட குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும் அதை தெளிவுபடுத்தி விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யப்பட வேண்டும்
இவ்வாறு அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்க வேண்டும் அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முறையாக மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.