Begin typing your search above and press return to search.
பிரதமரின் உருவ பொம்மையை எரித்து போராடிய தஞ்சை விவசாயிகள் கைது
விவசாயிகள் மீது காரை ஏற்றி, விவசாயிகளை கொலை செய்த சம்பவத்தில் அமைச்சர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டது
HIGHLIGHTS
தஞ்சாவூரிவ் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண்மை சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் 300 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் லக்கிம்பூரில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காரை ஏற்றி, விவசாயிகளை கொலை செய்த சம்பவத்தில் தொடர்புடைய அமைச்சர் பதவி விலக வேண்டும், உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், தஞ்சை ரயில் நிலையம் முன்பு பிரதமர், உள்துறை அமைச்சர் உத்தரபிரதேச முதல்வர் ஆகியோரின் உருவ படத்தை எரித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.