Begin typing your search above and press return to search.
விலை உயர்வு: சிலிண்டருக்கு மாலை அணிவித்து மாதர் சங்கத்தினர் நூதன போராட்டம்
இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்படும் நிலை உருவாகி யுள்ளது
HIGHLIGHTS
சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து, சிலிண்டருக்கு மாலை அணிவித்து மாதர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை ரயில் நிலையத்தில், சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன முறையில் நடைபெற்ற போராட்டத்துக்கு, மாதர் சங்கத் தலைவி தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். தொடர்ந்து விலை உயர்வால் ஏழை, எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்படுவதாகவும், இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்படும் நிலை உருவாகி யுள்ளது. எனவே உடனடியாக சிலிண்டர் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை வேண்டும். இல்லை என்றால், தேசிய அளவில் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். மேலும், மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டனர்.