/* */

ஹெலிகாப்டர் சகோதரர்கள் மோசடியில் காவல்துறைமீதான புகார்களும்விசாரணை: திருச்சி ஐஜி

இதுவரை ரூ.20 கோடிக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும், ரூ. 15 கோடி மோசடி குறித்து புகார்கள் வந்துள்ளன

HIGHLIGHTS

ஹெலிகாப்டர் சகோதரர்கள் மோசடியில் காவல்துறைமீதான புகார்களும்விசாரணை: திருச்சி ஐஜி
X

ஹெலிகாப்டர் சகோதரர்கள் மோசடி புகாரில் காவல்துறையினர் மீதான குற்றச்சாட்டுகளில், புலன் விசாரணையில் என்னென்ன தெரிய வருகிறதோ அனைத்தும் விசாரிக்கப்படும் என திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

தஞ்சை காவல்துறை துணை தலைவர் அலுவலகத்தில் ஆரம்ப காலத்தில் காவலர்கள் பயன்படுத்திய பழமை வாய்ந்த பொருட்களை காட்சிப் படுத்தும் வகையில் கண்காட்சி அமைப்பதற்கான பணிகளை ஆய்வு செய்த திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ஹெலிகாப்டர் சகோதரர்கள் மோசடி புகாரில் இதுவரை மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இன்னும் புகார்கள் வந்துள்ளதாகவும் அது தொடர்பாக விசாரணை செய்து கொண்டிருக்கிறது. எம். ஆர். கணேசன் என்பவரை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் இழந்த பணத்தை பறிமுதல் செய்வதற்கும், அந்த பணத்தை அவர்கள் எந்தெந்த வழியில் என்ன செய்திருக்கிறார்கள் என்பது குறித்து புலன் விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.

விரைவில் விசாரணை முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வோம். இதுவரை 20 கோடி ரூபாய்க்கு வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், மேலும் 15 கோடி ரூபாய் மோசடி குறித்து புகார்கள் வந்துள்ளதாகவும், அது தொடர்பான முதற்கட்ட விசாரணை செய்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்த அவர், ஹெலிகாப்டர் சகோதரர்கள் மோசடியில் காவல்துறையினரும் மீதான புகார்கள் எழுந்திருப்பது தொடர்பான கேள்விக்கு புலன் விசாரணையில் என்னென்ன தெரிய வருகின்றதோ அனைத்தையும் விசாரிப்போம் என அவர் தெரிவித்தார்.

Updated On: 10 Aug 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  2. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  3. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  4. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  5. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  6. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  7. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  8. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  9. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  10. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...