Begin typing your search above and press return to search.
தஞ்சையில் கனமழை
தஞ்சை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
HIGHLIGHTS
தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சை, திருவையாறு, பாபநாசம், செங்கிப்பட்டி, கல்லணை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. தற்போது கடந்த ஒரு மாத காலமாக தஞ்சை மாவட்டத்தில் வெயில் வாட்டி வந்த நிலையில், இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. தற்போது குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்று வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் மறுபுறம் கோடை சாகுபடி அறுவடை செய்யப்பட்டு, தற்போது கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல்லை கொட்டி வைத்துள்ளதால் நெல் மணிகள் பாதிக்கும் என அச்சம் தெரிவித்துள்ளனர்.