/* */

மனு கொடுத்த மறு நிமிடமே மூன்று சக்கர நாற்காலி வழங்கிய மாவட்ட ஆட்சியர்

மனு கொடுத்த அடுத்த நிமிடமே - முதுகுதண்டுவடம் பாதித்த மாணவனுக்கு 3 சக்கர நாற்காலி ஆட்சியர் வழங்கினார்.

HIGHLIGHTS

மனு கொடுத்த மறு நிமிடமே மூன்று சக்கர நாற்காலி வழங்கிய மாவட்ட ஆட்சியர்
X

மனு கொடுத்த அடுத்த நிமிடமே முதுகுதண்டுவடம் பாதித்த மாணவனுக்கு 3 சக்கர நாற்காலி ஆட்சியர் வழங்கினார்.

தென்காசி மாவட்டம், குருவிகுளம் யூனியனுக்கு உட்பட்ட நாயக்கர்பட்டி நாலாந்துலா கிராமத்தைச் சேர்ந்த முதுகு தண்டுவடம் பாதித்த மாற்றுத்திறனாளி மாணவன் மனோஜ்குமார் தனது பெற்றோர்களுடன் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனக்கு அரசின் சார்பில் உதவி புரிய வேண்டும் என மனு அளித்தார்.

இந்த மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. ரவிச்சந்திரன் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் ஜெயபிரகாஷிடம் தொடர்பு கொண்டு மாணவனுக்கு நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இதை அடுத்து முதுகு தண்டுவடம் பாதித்த மாணவன் மனோஜ் குமாருக்கு ரூ. 13 ஆயிரத்து 500 மதிப்புள்ளான சக்கர நாற்காலியை நலத்திட்ட உதவியாக உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து முதுகு தண்டுவடம் பாதித்த மாணவன் மனோஜ் குமாருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் துரை ரவிச்சந்திரன் உடனடியாக ஆட்சியர் கூட்டரங்கில் வைத்து சக்கர நாற்காலியை மாணவனுக்கு வழங்கினார். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு சார்பில் வழங்கப்படும் உதவிகள் கிடைப்பதற்காக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் மாணவனிடம் தெரிவித்தார்.

மனு கொடுத்த அடுத்த நொடியே மாற்றுத் திறனாளி மாணவனுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய மாவட்ட ஆட்சியர் துரை. ரவிச்சந்திரன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் ஜெயப்ரகாஷ் ஆகியோருக்கு மாணவனின் பெற்றோர்கள் கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்துக் கொண்டனர். இச்செயலை அனைத்து தரப்பு மக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Updated On: 14 April 2023 5:26 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...