/* */

வன்னியர் சங்க தலைவர் ஜெ.குருவின் நினைவு நாள்: பாமக-வினர் அஞ்சலி

வன்னியர் சங்கத் தலைவர் குருவின் நினைவு நாளை முன்னிட்டு பாமகவினர் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

HIGHLIGHTS

வன்னியர் சங்க தலைவர் ஜெ.குருவின் நினைவு நாள்: பாமக-வினர் அஞ்சலி
X

குருவின் உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்திய பாமகவினர்.

இன்று தமிழகம் முழுவதும் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தினர், வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு வின் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அதே போல் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள வன்னியர் சத்திரிய குல சமுதாய கட்டிடத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெ.குருவின் உருவப்படத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியினர் மாலை அணிவித்தும், மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்ச்சிக்கு தென்காசி மத்திய மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் சீதாராமன், மாநில துணைத்தலைவர் சேது. அரிகரன், மாவட்டத் தலைவர் குலாம், மாநில இளைஞரணி துணை செயலாளர் சாகுல் ஹமீது, மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் தென்காசி நகர செயலாளர் சங்கர், மாவட்ட இளைஞரணி செயலாளர் திருமலைக்குமாரசுவாமி, ஒன்றிய தலைவர் தண்டபாணி, ஒன்றிய செயலாளர் கருப்பசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 25 May 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  2. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  3. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  4. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  5. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  6. ஈரோடு
    ஈரோடு நந்தா ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் உலக பூமி தின கருத்தரங்கு
  7. ஈரோடு
    ஈரோட்டில் கோடை கால விளையாட்டுப் பயிற்சி: நாளை மறுநாள் துவக்கம்
  8. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்
  9. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!
  10. ஈரோடு
    ஈரோட்டில் பயங்கர தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்