Begin typing your search above and press return to search.
தென்காசி மாவட்டத்தில் நாளை மாபெரும் தடுப்பூசி முகாம்
தென்காசி மாவட்டத்தில் நாளை (30ம் தேதி) மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டத்தில் வரும் 30ம் தேதி மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது.
இம்முகாமில் முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள் மற்றும் இரண்டாவது மாதத்திற்கு மேல் நிறைவு பெற்றவர்களுக்கு தடுப்பூசிகள் போட ஏறப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
எனவே தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாக தங்களுக்கு அருகாமையில் நடைபெறும் மையங்களுக்கு ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண்ணுடன் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறும், தற்பொழுது நான்காவது அலை உருவாக வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறும் மாவட்ட ஆட்சியர் கோபாலசுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.