Begin typing your search above and press return to search.
தென்காசியில் நாளை (26ம் தேதி) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தென்காசியில் நாளை (26ம் தேதி) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
HIGHLIGHTS
இது தொடர்பாக, தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கோபால சுந்தர ராஜ் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது: தென்காசி மாவட்டத்தில், 2021 -ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நேரடி கூட்டமாக மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், வருகின்ற 26.11.2021 அன்று காலை10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வைத்து நடைபெறவுள்ளது. எனவே, அனைத்து வட்டார விவசாயிகளும் கலந்து கொண்டு, விவசாயம் தொடர்பான தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.