திமுக-வினர் கொண்டாட்டம்
தென்காசி மாவட்டத்தில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றதை திமுக-வினர் வெடி வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்
HIGHLIGHTS
தமிழக முதல்வராக திமுக தலைவர்மு. க. ஸ்டாலின் பதவி ஏற்றதையும், தமிழக அமைச்சரவையில் அமைச்சர்கள் பதவி ஏற்றதை கொண்டாடும் விதமாகவும் தமிழகத்தின் பல இடங்களில் தி.மு.க-வினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தென்காசி தெற்குமாவட்டம் பாவூர்சத்திரத்தில் கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனிதுரை, தென்காசி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் வழக்கறிஞர் சிவ பத்மநாதன், தொழிலதிபர் ஆர்.கே.காளிதாசன் ஆகியோர் கழக கொடி ஏற்றினர். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் தங்களது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் வைத்தீஸ்வரி ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் செல்லத்துரை இளைஞரணி துணை அமைப்பாளர் பொன் செல்வன் மாணவர் அணி அமைப்பாளர் மாரியப்பன் உட்பட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.