செங்கோட்டை தமுமுகவினரின் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி
செங்கோட்டையில் தமுமுகவினரின் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டம், செங்கோட்டை மேலூரில் அமைந்துள்ள எம்எம்எஸ் மஹால் அரங்கத்தில் அனைத்து சமுதாய மக்களுக்காக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் செங்கோட்டை நகரம் சார்பில் புதிய ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழாவில் மாநில துணைத் தலைவர் கோவை செய்யது ஆம்புலன்ஸை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் நகர தலைவர் செய்யது அலி தலைமை தாங்கினார். நகர துணை செயலாளர் முகமது சித்திக் வரவேற்றார். நகர பொருளாளர் முகமது, நகரச் செயலாளர் அல் ஹக்கீம், துணைத் தலைவர் முகமது ஹாஜி, நகர துணைச் செயலாளர் அப்துல் ஜாபர் புகாரி அஜ்மீர் காஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்வில் தமுமுக மாநில செயலாளர் நயினார் முகம்மது, அப்பல்லோ கல்வி குழுமங்களின் நிறுவனர் ரஜப்காசியர் மற்றும் தென்காசி மாவட்ட தலைவர் சலீம் மாவட்ட செயலாளர் கொலம்பஸ் மீரான், மாவட்டபொருளாளர் செங்கை ஆரிப், செயலாளர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.