/* */

சங்கரன்கோவிலில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வினியாேகம்

சங்கரன்கோவிலில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் கோபாலசுந்தரராஜ் இன்று துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

சங்கரன்கோவிலில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வினியாேகம்
X

சங்கரன்கோவிலில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் கோபாலசுந்தரராஜ் இன்று எம்எல்ஏ ராஜா முன்னிலையில் துவக்கி வைத்தார்.

தென்காசி மாவட்டத்தில் ரூ.24.14 கோடி மதிப்பிலான 4.58 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கான பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியை சங்கரன்கோவிலில் மாவட்ட ஆட்சியர் கோபாலசுந்தரராஜ் இன்று துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்காக அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1088 கோடி மதிப்பீட்டில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி இன்று முதல் துவங்கியுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் 4 லட்சத்து 58 ஆயிரத்து 689 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.24.14 கோடி மதிப்பில் பொங்கல் தொகுப்பு 658 நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கோபாலசுந்தரராஜ் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பொங்கல் தொகுப்பு பைகளை வழங்கினார். ஒவ்வொரு நியாய விலைக்கடைகளிலும் தினமும் 50 குடும்ப அட்டைகள் வீதம் பொங்கல் தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 4 Jan 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  3. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  5. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  6. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  7. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!