Begin typing your search above and press return to search.
பிறந்து சில நாட்களே ஆன குழந்தையின் சடலம் மீட்பு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பாலாஜி நகர் அருகே பாழடைந்த கிணற்றில் பிறந்து சில நாட்களே ஆன நிலையில் குழந்தை ஒன்று இறந்து கிடப்பாதா காவல் துறையினர்க்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற சின்ன கோவிலங்குளம் காவல் துறையினர் அங்கு சென்று பார்த்த போது அழுகிய நிலையில் குழந்தை இறந்து கிடப்பதைக் கண்டனர். மேலும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கபட்டு உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.