/* */

திரிபுரா அரசை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்டன ஆர்ப்பாட்டம்

வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்ய கோரியும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் ஆர்ப்பாட்டம்.

HIGHLIGHTS

திரிபுரா அரசை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்டன ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியாவினர்.

திரிபுராவில் ஆளும் பா.ஜ.க அரசின் ஆதரவுடன் நடத்தப்படும் வழிபாட்டுத் தலங்கள் மீதான தொடர் தாக்குதலை கண்டித்தும், வன்முறையில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்ய கோரியும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தென்காசி மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் கடையநல்லூரில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் லுக்மான் ஹக்கீம் தலைமை தாங்கினார்.

தேசிய செயற்குழு உறுப்பினர் முகம்மது அலி ஜின்னா, பாப்புலர் ஃப்ரண்ட் தமிழ் மாநில செயற்குழு உறுப்பினர் செய்யது இப்ராஹீம் உஸ்மானி மற்றும் நெல்லை மண்டல தலைவர் திப்பு சுல்தான் மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டத் தலைவர் யாசர்கான் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜமாத்தார்கள், சமூக ஆர்வலர்கள், பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் நகர, கிளை நிர்வாகிகள் உட்பட திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 30 Oct 2021 2:00 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  6. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  8. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  9. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  10. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...