/* */

வியாபாரியை கொலை செய்ய முயற்சி- 2 பேர் கைது

வியாபாரியை  கொலை செய்ய முயற்சி- 2 பேர் கைது
X

கடையம் அருகே பஞ்சுமிட்டாய் வியாபாரியை கட்டையால் அடித்து கொலை முயற்சியில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி மாவட்டம்,கடையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆசீர்வாதபுரத்தில் வசித்து வரும் தாசன் பிரவீன் (25) என்பவர் கடையத்திலுள்ள கோவில் திருவிழாவில் பஞ்சுமிட்டாய் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இரண்டு நபர்கள் அவர்களின் குழந்தைகளுக்கு பஞ்சு மிட்டாய் வாங்கிக் கொடுத்து விட்டு பணம் கொடுக்காமல் சென்றுள்ளனர். பணம் கொடுங்கள் என்று தாசன் பிரவீன் அவர்களிடம் கேட்டதற்கு, எங்களிடமே பணம் கேட்கிறாயா என்று கூறி இருவரும் சேர்ந்து தாசன் பிரவீனின் தலையில் கட்டையால் அடித்து கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து தாசன் பிரவீன் கடையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி கொலை முயற்சியில் ஈடுபட்ட வல்லத்தைச் சேர்ந்த செல்லத்துரை என்பவரின் மகன் சுரேஷ் (28) மற்றும் கொம்பமுத்து என்பவரின் மகன் கண்ணன் (30) ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 31 March 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  2. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  3. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  4. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  5. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  6. வீடியோ
    பெயிலில் வெளியே சுத்தும் ராகுல் மற்றும் சோனியா காந்தி !#Rsrinivasan...
  7. மேலூர்
    மதுரை மக்களிடம் விடைபெற்று பூப்பல்லக்கில் மலைக்கு புறப்பட்டார்...
  8. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  9. திருவள்ளூர்
    கோடை வெயிலின் காரணமாக 25 அடியாக குறைந்த பூண்டி நீர்த்தேக்க நீர்மட்டம்
  10. திருப்பரங்குன்றம்
    பாஜக வின் பி டீம் தேர்தல் ஆணையம்: மாணிக்கம் தாகூர் எம்பி...