/* */

கிணற்றில் தவறி விழுந்தவர் சடலமாக மீட்கப்பட்டார்

சுரண்டையில் குடிபோதையில் ஊர் பொதுக் கிணற்றில் தவறி விழுந்தவர் சடலமாக மீட்கப்பட்டார்.

HIGHLIGHTS

கிணற்றில் தவறி விழுந்தவர் சடலமாக மீட்கப்பட்டார்
X

சுரண்டை சிவகுருநாதபுரம் விவேகானந்தர் குறுக்கு தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் சமுத்திரம் (57). சமையல் வேலை செய்து வந்தார். கடந்த 11ஆம் தேதி மாலை வேளையில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீட்டிற்கு திரும்பவில்லை. சமையல் வேலைக்கு சென்றிருக்கலாம் என குடும்ப உறுப்பினர்கள் எண்ணியிருந்தனர். தொடர்ந்து 2 நாட்களாக அவரிடமிருந்து தகவல் எதுவும் வராமல் இருக்கவே, அவரை தேடி வந்த நிலையில் இன்று ஊர் பொதுக் கிணற்றிற்கு சென்றவர்கள், சமுத்திரம் சடலமாக கிடப்பதை கண்டு குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த சுரண்டை போலீசார், மற்றும் வருவாய்த் துறையினர், சுரண்டை தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினரின் உதவியுடன் அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் மதுப்பழக்கத்திற்கு அடிமையான சமுத்திரம் குடிபோதையில் கிணற்றில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 15 Jan 2021 6:14 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!