/* */

அனுமதியின்றி சவடு மண் அள்ளிய டிராக்டர்கள், ஜேசிபி இயந்திரம் பறிமுதல்

அரளிப்பட்டி அருகே விவசாய இடத்தில் அனுமதியின்றி சவடு மண் அள்ளிய டிராக்டர்கள், ஜேசிபி இயந்திரம் பறிமுதல்.

HIGHLIGHTS

அனுமதியின்றி சவடு மண் அள்ளிய டிராக்டர்கள், ஜேசிபி இயந்திரம் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டர்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அரளிப்பட்டியை சேர்ந்தவர் சேதுபதி. இவர் தன்னுடைய சொந்த விவசாய இடத்தில் தனது தேவைக்காக சவுடு மண் அள்ளியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இன்று காலை சிங்கம்புணரி வட்டாட்சியர் திருநாவுக்கரசுக்கு வந்த தொலைபேசியில் அனுமதியின்றி மணல் எடுக்கப்படுவதாக புகார் கூறப்பட்டது. அதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வட்டாட்சியர் திருநாவுக்கரசு மேற்படி விவசாய நிலத்தில் இருந்த சவடு மண்ணை அள்ளிய ஜேசிபி இயந்திரம் மற்றும் 2 டிராக்டர்களை பறிமுதல் செய்தார்.

இதனையடுத்து பறிமுதல் செய்த ஜேசிபி இயந்திரம் மற்றும் 2 டிராக்டர்களை எஸ்.வி.மங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அரசு அனுமதியின்றி சவடு மண் அள்ளியதற்காக சதுர்வேதமங்கலம் கிராம நிர்வாக அதிகாரி பால முருகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் விஜயன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 9 Aug 2021 11:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  2. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  3. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  6. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  7. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  8. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வாழை இலை பரோட்டா செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    இளைஞர்களின் இன்னொரு தோழன், பைக்..!