/* */

கோயில் விழாவில் அடையாளம் தெரியாத நபர்கள் மஞ்சுவிரட்டு நடத்தியதால் பரபரப்பு

சிங்கம்புணரி அருள்மிகு சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா நடைபெற்றது

HIGHLIGHTS

கோயில் விழாவில் அடையாளம் தெரியாத நபர்கள் மஞ்சுவிரட்டு நடத்தியதால் பரபரப்பு
X

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கோயில் திருவிழாவில்  அடையாளர் தெரியாத நபர்களால் அவிழ்த்து விடப்பட்ட காளையைப்பிடிக்க முயன்ற இளைஞர்கள்

சிவகங்கை மாவட்டம்,சிங்கம்புணரி அருள்மிகு சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா நடைபெற்றது. அதில் முக்கிய நிகழ்வாக எருதுகட்டு விழா நடைபெற்றது. இதில் சீரணி அரங்கம் பகுதியில் கோவில் மாடுகள் பூஜைகள் செய்யப்பட்டு வடத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. அப்போது அங்கு வந்த போலீசாரின் வேண்டுகோள் படி கிராமத்தார்கள் மாடுகளை அவிழ்த்து விடாமல் பிடித்துச்சென்றனர்.

இதனிடையே அங்கு வந்த சில அடையாளம் தெரியாத நபர்கள் சுமார் 50 க்கும் மேற்பட்ட மாடுகளை கொண்டு வந்து ஆங்காங்கே அவிழ்த்து விட்டனர். அதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. திடீரென மாடுகள் அவிழ்த்து விடப்பட்டதால் இளைஞர்கள் மற்றும் அப்பகுதி மஞ்சுவிரட்டு ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.

அதைத் தொடர்ந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அப்பகுதியில் கூடியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சிங்கம்புணரி காவல் ஆய்வாளர் சீராளன் தலைமையிலான போலீசார் கூட்டத்தை கலைத்தனர். எதிர்பாராமல் நடந்த மஞ்சுவிரட்டால் இளைஞர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் உற்சாகமடைந்தனர். எருதுகட்டில் மஞ்சுவிரட்டு மாடுகளை அவிழ்த்துவிட்ட நபர்களை சிங்கம்புணரி போலீசார் தேடிவருகின்றனர். பள்ளி விடுமுறை காரணத்தால் அதிகமான பள்ளி மாணவர்கள் இதில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Updated On: 20 Oct 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!