Begin typing your search above and press return to search.
மனைவியுடன் கருத்து வேறுபாடு:மாவட்ட ஆட்சியரகத்தில் கணவர் தீக்குளிக்க முயற்சி
உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார்
HIGHLIGHTS
மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவகம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்த கணவரை போலீஸார் தடுத்தி நிறுத்தினர்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள வெளியாத்தூர் கிராமத்தை சேர்ந்த அறிவுக்கரசு. இவர் தனது மனைவியிடன் ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு நின்று, உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார். இதை பார்த்த காவலர்கள் மற்றும் அருகில் இருந்தவர்கள் அவரை தடுத்து காப்பாறறினர். பின்னர் முதலுதவி சிகிச்சைக்காக சிவகங்கை மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை முயற்சி குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.