/* */

சிவகங்கையில் ரயில் மறியல் போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது

சிவகங்கையில் ரயில் மறியல் போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

சிவகங்கையில் ரயில் மறியல் போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது
X

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

சிவகங்கையில், விவசாயிகள் போராட்டம்:

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக, சிவகங்கை ரயில் நிலையம் முன்பு ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பாக தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் எல்.ஆதிமூலம் தலைமையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை ரயில் நிலைய முன்பாக திரண்டவிவசாய சங்க பிரதிநிதிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி , முன்னதாக கண்டனம் முழக்கமிட்டனர்.


நாடு தழுவிய ரயில் மறியல்போராட்டம் நடந்து வரும் நிலையில், சிவகங்கையிலும் மத்திய மோடி அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லியில் போராடும் விவசாயிகளை சுட்டுக்கொல்லாதே , குறைந்தபட்ச ஆதார விலைக்கு நிரந்தர சட்டம் கொண்டு வர வேண்டும், எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும், மின்சார ஒழுங்குமுறை சட்டத்தை திரும்ப பெற வேண்டும் வேளாண் கடன் முழுமையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி, கண்டனம் முழக்கமிட்டனர்.

பின்னர் , ரயில் நிலையம் செல்ல முற்பட்டவர்களை போலீசார் தடுத்து அவர்களை கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். ஐக்கிய விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்று கைதானர்கள்.

Updated On: 11 March 2024 12:49 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  2. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  6. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  7. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  9. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  10. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!