அகரம் அகழாய்வு தளத்தில் புதிதாக ஒரு உறை கிணறு கண்டுபிடிப்பு
திருப்புவனம் அருகே அகரம் அகழாய்வு தளத்தில், புதிதாக மேலும் ஒரு உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி அகரம் மணலூர் கொந்தகை ஆகிய இடங்களில் இதுவரை ஆறு கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்றுள்ளன. தற்போது 7ம்கட்ட அகழாய்வுப்பணி, கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன.
இந்நிலையில், அகரத்தில் நடைபெறும் அகழாய்வின் போது, 8அடி ஆழத்தில் புதிதாகக் மேலும் ஒரு உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அகழாய்வு செய்யும் பட்சத்தில், அதன் ஆழமும் ,அகலமும், மற்றும் பயன்பாடு தெரியவரும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றனர்
அகரத்தில் இதற்கு முன்பே, ஒரு குழியில் 15 சுடுமண் உறைகள் கொண்ட 15அடி நீளமுள்ள உறை கிணறும் , மற்றொரு குழியில் 8 சுடுமண் உறைகள் கொண்ட 8அடி நீளமுள்ள உறைகிணறுகள் என, 2 உறை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது மூன்றாவதாக உறைகிணறு கிடைத்ததுள்ளது. ஆராய்ச்சியாளர்களின் ஆர்வத்தைக் தூண்டியுள்ளது.