/* */

மலேசியாவில் விபத்தில் சிக்கிய இளைஞரை சொந்த ஊர் கொண்டு வந்த கலெக்டர்

மலேசியாவில் விபத்தில் சிக்கிய பாண்டியனை சொந்த ஊர் கொண்டுவர முயற்சி செய்த மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்த குடும்பத்தினர்.

HIGHLIGHTS

மலேசியாவில் விபத்தில் சிக்கிய இளைஞரை சொந்த ஊர் கொண்டு வந்த கலெக்டர்
X

சிவகங்கை மாவட்டம், கானாடுகாத்தான் பேரூராட்சி, நேமத்தான்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர் மலேசியாவிற்கு வேலைக்கு சென்றுள்ளார். கடந்த மாதம் விபத்தில் சிக்கி இந்தியா வருவதற்கு வழி இல்லாமல் தவித்த நிலையில் இவரது மனைவி பாண்டிமீனா,

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனை நேரில் சந்தித்து, பாண்டியனை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவிட கோரிக்கை மனு கொடுத்தனர். மாவட்ட ஆட்சியர் மதுசூதன் விரைந்து நடவடிக்கை எடுத்தார். அதன் பயனாக 23.03.2021, அன்று இரவு மலேசியாவில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கிருந்து பாண்டியை புதுக்கோட்டை மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதே கோரிக்கையை சிவகங்கை தொகுதி எம்.பி.யாக இருக்கும் கார்த்தி சிதம்பரம், தமிழக மக்கள் மன்றம் தலைவர் ராஜ்குமார் ஆகியோரிடமும் உதவிகேட்டு கோரிக்கை மனு கொடுத்தனர். இவைகளின் பலனாக இன்று பாண்டியன் பத்திரமாக உறவினர்களிடம் சேர்க்கப்பட்டார்.

மாவட்ட ஆட்சியர் மதுசூதன், கார்த்தி சிதம்பரம் எம்.பி., மக்கள் மன்றம் ராஜ்குமார் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றியை குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Updated On: 25 March 2021 3:48 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!