/* */

ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே சுகப்பிரசவத்தில் பிறந்த இரட்டை ஆண் குழந்தை

திருப்பத்தூரில் பிரசவத்திற்காக அழைத்து சென்ற பெண்ணுக்கு ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே இரட்டை ஆண் குழந்தை பிறந்தது

HIGHLIGHTS

ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே சுகப்பிரசவத்தில்     பிறந்த இரட்டை ஆண் குழந்தை
X

ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே  பிறந்த இரட்டை ஆண் குழந்தை 

திருப்பத்தூரில் கூலி தொழிலாளி மனைவியை பிரசவத்திற்காக அழைத்து சென்ற நிலையில், ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே இரட்டை ஆண் குழந்தை சுகப்பிரசவமாக பிறந்ததால் மகிழ்ச்சியடைந்தனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் தங்கி, ஒப்பந்த முறையில் விறகு வெட்டும் தொழிலாளியாக தொழில் செய்து வருபவர்கள். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்த சின்னசாமி, விஜயசாந்தி தம்பதியினர். இந்நிலையில்,, நிறைமாத கர்ப்பிணியான விஜய சாந்திக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, அருகிலுள்ள திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறப்பு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் ஏற்றி ,சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை செல்வதற்குள் விஜயசாந்திக்கு சுகப்பிரசவமாக அடுத்தடுத்து இரு அழகான ஆண் குழந்தைகள் பிறந்தன. முன்னதாக வழியில் பிரசவ வலியால் துடித்தவருக்குஆம்புலன்ஸை நிறுத்தி செவிலியர் போதும் பிள்ளை விரைவாக செயல்பட்டு மருத்துவ உதவிகளை செய்து குழந்தைகள் பிரசவிக்க வைத்துள்ளார்.

பின்பு,தாயும், குழந்தைகளும் சிவகங்கை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நலமாக உள்ள நிலையில்,ஆம்புலன்ஸ் வாகனத்தை பாதுகாப்பாக இயக்கிய ஓட்டுனர் மலையரசனையும்,உரிய நேரத்தில் சிறப்பாக மருத்துவ சிகிச்சை அளித்த ஆம்புலன்ஸ் செவிலியர் போதும் பிள்ளையையும் மருத்துவர்களும், பொதுமக்களும் பாராட்டினர்.


Updated On: 25 Feb 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!