/* */

காரைக்குடியில் யானை தந்தத்திலான பொருட்கள் பறிமுதல்

காரைக்குடியில் பல லட்சம் பெறுமானமுள்ள யானை தந்தத்திலான பொருட்கள் பறிமுதல் செய்து வனத்துறையினர் நடவடிக்கை

HIGHLIGHTS

காரைக்குடியில் யானை தந்தத்திலான பொருட்கள் பறிமுதல்
X

காரைக்குடி அருகே கைப்பற்றப்பட்ட தந்ததிலாலான கலைப்பொருட்கள்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 20ற்கும் மேற்பட்ட பழங்கால கலைப் பொருட்கள் விற்பனை கடைகள் உள்ளன.இக்கடைகளில் யானைத் தந்தத்தால் ஆன, வன உயிரினங்களின் உறுப்புகளைக் கொண்டு செய்யப்பட்ட பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக சென்னை வன நுண்ணறிவு மற்றும் புலனாய்வு உதவி வன பாதுகாவலருக்கு புகார் வந்தது.

புகாரின் அடிப்படையில் இன்று காரைக்குடி பகுதி உதவி வன பாதுகாவலர் மணிவண்ணன் துணையோடு பழங்கால கலை பொருட்கள் கடைகளில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.இந்த சோதனையில் யானை தந்தத்தால் செய்யப்பட்ட எழுத்தாணி, விளையாட்டு பொம்மைகள், தாயக் கட்டைகள், குங்குமச்சிமிழ், மற்றும் மான் கொம்பு, புலி பல் உட்பட பல பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கலாம் என கருதப்படும் நிலையில்,பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் சிவகங்கையில் உள்ள மாவட்ட வன அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, விசாரணைக்காக கலைப்பொருள் வியாபாரி அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

Updated On: 15 Feb 2022 8:35 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!