/* */

சேலம் தலைமை தபால் நிலையம் முன் மறியல்: 500க்கும் மேற்பட்டோர் கைது

சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

சேலம் தலைமை தபால் நிலையம் முன் மறியல்: 500க்கும் மேற்பட்டோர் கைது
X

சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 

மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி ஜனாதிபதி ஒப்புதல் அளித்து ஒரு ஆண்டு நிறைவு பெற்றதையடுத்து, வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்றைய தினம் நாடு முழுவதும் பாரத் பந்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி 500க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு கைவிடவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டிருந்ததோடு போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டிருந்தது.

Updated On: 27 Sep 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!