/* */

பாரில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை....

சேலத்தில் மதுபான பாரில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் குத்திக்கொலை. ஒருவர் கைது. மற்றொரு குற்றவாளியை தேடி வருகின்றனர்

HIGHLIGHTS

பாரில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை....
X

கொலையான கிருபாகரன்

சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்து வந்தவர் கிருபாகரன்(40) . நேற்று ஆனந்தாபாலம் அருகே உள்ள மதுபானகடையில் நேற்று இரவு தனது நண்பரான ஆமதி உசேன், சீனிவாசன் ஆகியோருடன் மது அருந்திக் கொண்டிருந்தார். அதே பகுதியில் மேட்டுத்தெருவைச் சேர்ந்த மோகன் அவரது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தார்.

மோகன் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பாக கிருபாகரனின் நண்பர் ஒருவர் மனைவியுடன் சுற்றித் திரிந்து வந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே பிரச்சினை இருந்து வந்த நிலையில் மது அருந்திக் கொண்டிருந்த போது இருதரப்பு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி தகராறாக மாறிய நிலையில் மோகன், அவரது நண்பர் கோபாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் பீர்பாட்டிலை உடைத்து கிருபாகரன், சீனிவாசன் ஆகியோரை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் மோகன் வைத்திருந்த கத்தியால் கிருபாகரனை வயிற்றில் குத்தியுள்ளார்.

இதனால் படுகாயமடைந்த கிருபாகரன், சீனிவாசன் மற்றும் தகராறை தடுக்க வந்து அம்ஜத் ஆகியோர் படுகாயமடைந்து சேலம் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த டவுன் காவல்துறையினர் இந்த மோதல் தொடர்பாக ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் இன்று பிரபாகரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து, இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி முக்கிய குற்றவாளி மோகன் உள்ளிட்ட 2 பேரை தேடி வருகின்றனர்.

Updated On: 11 April 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  2. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  3. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  4. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  5. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  8. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  9. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  10. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு